Thursday, November 20, 2008

உயிரே..

மண்ணை விட்டு போக சொன்னாலும் போவேன்..
உன்னை விட்டு போக சொல்கிறாயே..
உன்னை நீங்காமலே வாழ்வதாயின்..
ஒரு நொடி கூட தூங்கமாலே,
உன்னை தாங்கி கொள்வேன்..
மரண பயத்தை கூட உயிர் தாங்குது..
உன் பிரிவை நினைத்தாலே
உயிர் நோகுது..
உன் இதழ் ஓர புன்னகையில் தான்
என் உயிர் நாடி உள்ளது..
நீ என்னை சாட்டையால் அடித்தாலும்
சிரித்து கொள்வேன்..
என் கனவு கோட்டையை இடித்து விடாதே..
தெரியும் எனக்கு..
ஒரு நாள்..
உன் மௌனம் கலையும்..
என் பாசம் உன்னிடம் பேசும்..
என் நேசம் உன்னை தழுவும்..
எது வரை என்கிறாயா?
என் சுவாசம் நிற்கும் வரை..
இல்லை இல்லை..
என் சுவாசம் நின்ற பின்னும்..

--நிலா பெண்

No comments: