Friday, May 18, 2018

சிலிர்க்க வைக்கிறதே!

மொட்டை மாடியில்
உலரும் துணிகளை
எடுக்கையில்
வீணை இசையாய்
மனதை மீட்டுகிறது,
மங்கிய மழை நேரம்
நாம் கண்களால்
கவிதை வரைந்த
நொடிகளை!
கன்னம் மறைத்த
கூந்தலை ஒதுக்கிய
உன் விரல்களை,
சாலைக் கடக்கையில்
குளிர்ந்த காற்றின்
வருடல்கள்
நினைவூட்டுகிறது
நிதானமாய்!
கல்லெறிந்து தெறித்த
நீர்த்துளிகள்
தொட்டும் தொடாமலும்
படுவது போல்,
காதல் மணித்துளிகள்
சீண்டிவிட்டு
சிலிர்க்க
வைக்கிறதே!
--நிலாப்பெண்


No comments: