Monday, May 27, 2013

சாபம்

உன் ராசாத்தி நானென நம்பி
கட்டிய கனவுக்கோட்டைகள் 
நொறுங்கும் நேரம்.
உன் முத்தம் அறிந்த
உதடுகளை பிதுக்கி
அழ மட்டுமே முடிந்தது.
சாபத்தை வரமாய் பெற்றப்பின்
ஆவித் துடித்தாலும்
கண்ணீர் வெடித்தாலும்
செத்த காதலுக்கு
எப்படி உயிர் வரும்?
பாவியாய் போனேன்
பரிதவித்து நின்றேன்.
என் இதயத்தின் கனம்
அதிகரித்துக் கொண்டே,
எறியமுடியாமல்
எரியவும் முடியாமல்!!!

--நிலாப்பெண்..