Friday, May 25, 2018

NOW is REAL!!

I was walking towards my gym and I saw a tiny chirpy bird flying towards the middle of the road again and again and the cars were speeding up both the ways. 

As I went closer my heart beats rose as the bird was unstoppable and was just flying to the middle of the road repeatedly and two cars were speeding up on both the ways and there it picked up a small piece of a bread or something and flew away quickly before the cars could crush it.

I was like wow! What courage! What an attention! What planning!

If a little bird can risk so much for its aim, why do we humans always want to play safe and wait when we have only one life..

No! no! I am not talking about doing things which could turn suicidal but when we know we WANT something and still wait all life longing for it we become tinier than a bird! 

The cars passed is like our obstacles. The roads are going to be busy all day and if you wait till night to pick your aim, someone would’ve already taken it or the aim would have been crushed by one of the passing cars and you would be waiting all your life.

So be like this tiny bird. Plan! Be attentive! Workout how to get it without being crushed! Do not give up as WE ALL HAVE ONE LIFE!

Dont wait for Mondays!
Don’t wait for New year to take resolutions


NOW is REAL! 

Friday, May 18, 2018

உயிர் பிரியா இறப்பு!


வேண்டுமென்றே
மீண்டும் மீண்டும்
தொலைக்கிறேன்
என் அடையாளத்தை,
உயிர் பிரியா இறப்பு!
நிலாப்பெண்..

மாமழை மறைத்தது!

மெதுவாய் நகரும்
மேகத்தின் ஊடே
உன் முகம் வரைந்து
ரசித்த நேரம்;
மழைத்துளி துளிர்த்து
ஓவியம் கரைய,
வெடித்த கண்ணீரை
மாமழை மறைத்தது!
--நிலாப்பெண்..

நகர மறுக்கிறது!


விரல் ஒட்டிய
கோல மாவாய்
காதலில் கரைந்த
நாட்கள்,
மனதில் ஒட்டி
நகர மறுக்கிறது,
எத்தனை முறை
உதறினாலும்!
நிலாப்பெண்..

எதற்கு கவிதை??


திருமணத்திற்கு பின் ஏன் கவிதை எழுதுவதில்லை??
கவிதையே சொந்தமான பின்
இன்னும் எதற்கு கவிதை??
--நிலாப்பெண்..

சிலிர்க்க வைக்கிறதே!

மொட்டை மாடியில்
உலரும் துணிகளை
எடுக்கையில்
வீணை இசையாய்
மனதை மீட்டுகிறது,
மங்கிய மழை நேரம்
நாம் கண்களால்
கவிதை வரைந்த
நொடிகளை!
கன்னம் மறைத்த
கூந்தலை ஒதுக்கிய
உன் விரல்களை,
சாலைக் கடக்கையில்
குளிர்ந்த காற்றின்
வருடல்கள்
நினைவூட்டுகிறது
நிதானமாய்!
கல்லெறிந்து தெறித்த
நீர்த்துளிகள்
தொட்டும் தொடாமலும்
படுவது போல்,
காதல் மணித்துளிகள்
சீண்டிவிட்டு
சிலிர்க்க
வைக்கிறதே!
--நிலாப்பெண்


நமைத் தேடி!


கரடு முரடான
காட்டு பாதையில்
துள்ளி ஓடும்
மானாய்
நம் காதல்!
கல் தடுக்கி
விழுமோ
கால் தடுக்கி
விழுமோ என்ற
பதைபதைப்பு!
அந்த வஞ்சப் புலியிடம்
அகப்படுமோ?
புதைக்குழியில்
புதைந்து விடுமோ
என்ற பரிதவிப்பு!
நாம் கைக்கோர்த்து
கண்ணீர் கரைந்து
காதல் தேடுகையில்
புது மழலையாய்
அந்த மான்
நம் மடியில்
நமைத் தேடி!

--நிலாப்பெண்


நிலவா!


என் வாழ்வை இத்தனை அழகாய்
செதுக்கிய சிற்பி நீ!
என் உலகை வண்ணமயமாய்
வரைந்த ஓவியன் நீ!
கருவில் வந்து தாய்மை
உணர்வை தந்த கடவுள் நீ!
எனக்காக உனை சுமந்து
உன்னால் உயிர் சுமந்தேன்!
நீ பிறந்த இத்தினம்
நான் மறுமுறை பிறந்த தினம்!
கவிதையாய்
காதலாய்
உன் மழலைக்குள் நான்,
முதல் முறை மழை கண்ட மழலையாக!
நிலவா! ஒளியை மட்டும் காண்கிறேன்
உன்னால்!

--
நிலாப்பெண்


Sunday, June 9, 2013

3 MOVIES

I happened to watch 3 English movies this week, I thought I would share the experience with you all.
First movie's name is "The Vow" and it made me to say wow.. An amazingly wonderful love cum romantic movie. I enjoyed it to the core.

The other movie was "How to fall in love" which again gave me enlightenment on many things especially  about  love and trust. Compromise and Follow your heart were the 2 valuable advice I got through that movie.

Finally a recent movie named "Now you see me" It was surely a visual treat with so many things to think and recollect about. When we look much closer into something, then we are missing the bigger picture :) Nice message I got from this movie.

I am sure everybody would enjoy these movies.

Monday, May 27, 2013

சாபம்

உன் ராசாத்தி நானென நம்பி
கட்டிய கனவுக்கோட்டைகள் 
நொறுங்கும் நேரம்.
உன் முத்தம் அறிந்த
உதடுகளை பிதுக்கி
அழ மட்டுமே முடிந்தது.
சாபத்தை வரமாய் பெற்றப்பின்
ஆவித் துடித்தாலும்
கண்ணீர் வெடித்தாலும்
செத்த காதலுக்கு
எப்படி உயிர் வரும்?
பாவியாய் போனேன்
பரிதவித்து நின்றேன்.
என் இதயத்தின் கனம்
அதிகரித்துக் கொண்டே,
எறியமுடியாமல்
எரியவும் முடியாமல்!!!

--நிலாப்பெண்..

Monday, April 29, 2013

பூவும் வண்டும்


வண்டை பூ மொய்த்து பார்த்ததுண்டா,
என் கண்களை பார்..
உன் கண்களை பார்க்கும் வேளைகளில்...

--நிலாப்பெண்..

Sunday, February 3, 2013

நிலா

எங்கோ நீ
எங்கோ நான்
இரவில் மட்டும் சேர்கிறோம்
நம்மை பார்க்கும் நிலவினால்!

--நிலாப்பெண்..

Sunday, January 20, 2013

வெறுமை!



கண்கள் கலங்கி
கண்ணீர் வழிய எத்தனிக்கும்
அத்தருணம்
வெறுமை!

காதல் சொல்லி
காத்திருக்கும்
அத்தருணம்
வெறுமை!

மோதல் செய்து
மெளனம் சுமக்கும்
அத்தருணம்
வெறுமை!

இருவர் கைக்கோர்த்து
நடக்கும் பாதையில் ஒத்தையாய்
போகும் அத்தருணம்
வெறுமை!

செல்லிடையில் சிணுங்கலுக்காய்
காத்திருக்கும்
அத்தருணம்
வெறுமை!

ஜன்னல் பறவைகள்
சொல்லாமல் கூட பறந்துப்போகும்
அத்தருணம்
வெறுமை!

கூந்தல் கோதிவிட
கைகள் தேடும்
அத்தருணம்
வெறுமை!

எதையோ சாதித்தப்பின்
அடுத்து என்னவென தவிக்கும்
அத்தருணம்
வெறுமை!

பசியோடு தூங்க முனைந்து
இருளின் கைப்பிடிக்கும்
அத்தருணம்
வெறுமை!

பழைய பரிசுகள் நிரம்பிய
இன்றைய பிறந்த தினத்தின்
அத்தருணம்
வெறுமை!

உறவுகள் ஊர்செல்லும்
ரயில் நிலைய பிரிவின்
அத்தருணம்
வெறுமை!

புன்னகை சொல்லி
பதில் இல்லா
அத்தருணம்
வெறுமை!

வாழ்க்கையின் சில வெறுமையான பக்கங்கள்
நிரப்பப்படுவதில்லை..
நிரப்ப மனமுமில்லை..

நிலாப்பெண்..

Friday, November 16, 2012

பீன்ஸ் பொரியல் Beans Poriyal

தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 1/4 கிலோ.
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப, (நான் 5 ப.மிளகாய் போட்டேன்.)
பூண்டு -- 3 பல் ( ஜீரணத்திற்கு நல்லது) (போடலைன்னாலும் பரவாயில்லை)
உப்பு -- தேவையான அளவு
தாளிக்க: 
எண்ணெய் - 2 தேக்கரண்டிதேக்கரண்டி -ன்னா Teaspoon)
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
 கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை





 முதலில் பீன்சை நன்றாக நீரில் கழுவ வேண்டும். முடிந்தால் வெந்நீர் விட்டுக் கழுவலாம்..
 நான் எவ்வளவு அழகாய் குட்டி குட்டியாய் வெட்டியிருக்கேன்.. அதே போல பீன்சை நறுக்கவும்
 1 அல்லது 1 வெங்காயம், காரத்திற்கு தகுந்தாற் போல் பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். வேண்டும் என்றால் 4 பல் பூண்டும் சேர்க்கலாம், ஜீரணத்திற்கு நல்லது.

==> கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உழுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளிக்கவும்.
==> சிறிது நேரம் வதக்கியவுடன், வெங்காயம் சேர்த்து, வதக்கவும்.
==> வெங்காயம் பொன்னிறமான பின், நறுக்கிய பீன்ஸை போட்டு வதக்கவும்
 பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணிர் ஊற்றி நன்றாக வதக்கவும். மிதமான தீயில் வைக்க வேண்டும். தண்ணீர் வற்றும் வரை அப்பப்போ வதக்கி விடவும். 5 - 10 நிமிடங்களில் பீன்ஸ் பொரியல் தயார்.
ஆரோக்கிய பலன்: பீன்ஸ் சாப்பிட்டால், நுரையீரலுக்கும் நல்லது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் நுரையீரல் தான் அதிகம் பாதிக்கப்படும், அவர்கள் தினம் பீன்ஸை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது.

--நிலாப்பெண்


© Copyrighted