Friday, August 5, 2011

தேவதன் :)


பெண்கள் தேவதைகளாக வருணிக்கப் படுகிறனர்..
உன்னை என்னவென சொல்வது?
சரி! வித்தியாசத்திற்கு
உனை பெற்ற அம்மா தேவதையாகட்டுமே!

புன்னகை


மரணத்தை கொல்ல வேண்டுமா,
ஒரு முறை புன்னகை செய்..
மரணம் கெஞ்சும் வாழ்வதற்கு!

தெரியும்..

உன் பார்வைக்குள் வசியம் வைத்திருக்கிறாயடா!!
எப்படித் தெரியுமா?
பிறகு எப்படி எப்போதும் எனக்கு நீயே தெரிகிறாய்?

--நிலாப்பெண்..

காதல்..


நீ ஆறுதல் கூறுவதானால்,
இன்னும் ஆயிரம் முறை சண்டையிடலாம்...

--நிலாப்பெண்..

Wednesday, July 27, 2011

இலையுதிர் காலத்தில் அரும்பிய மலர்- காதல்!


காதலித்த பின் இருக்கும் ஒரே “வலி”, காதலை காதலிக்காமல் இருப்பது.

முதன் முறையாய் அவன் காதல் சொன்ன இடத்திற்கு எந்த இலக்கும் இல்லாமல் சென்றாள். அவர்கள் அமர்ந்த அந்த மரத்தின் கீழ் அமர்ந்தாள். இது இலையுதிர் காலம், மரத்திற்கு மட்டுமல்ல அவளுக்கும் தான்.

மரத்தில் சாய்ந்து கண் மூடினாள், கையற்ற மரம் அவளை அணைத்து ஆறுதல் கூறுவது போல் உணர்ந்தாள். கண் திறந்து பார்க்கையில், மூடிய கண்களுக்குள் நுழைந்திருந்த கண்ணீர் துளிகள் உதிர்ந்து விழுந்தன புற்களின் தலை மேல்.

அவன் காதலைச் சொன்னப்போது மறுத்த முதல் மூன்று நாட்கள் நினைவில் இன்று நிழலாடின, அப்படியே மறுத்திருந்தால், இன்று மறக்க முடியாமல் மருங்க மாட்டேனே என.

செல்லிடைப்பேசியை அவ்வப்போது பார்த்தாள், சிணுங்கி அழைக்காதோ என.

எத்தனை, செல்லம் கொஞ்சியுள்ளோம் இச்செல்லிடை வழியே. உயிருடன் இருந்தும் செத்து விட்டதோ செல்லிடை என சோதித்தாள், அவள் காதல் உயிர்ப் பெற வழியுண்டோ என.

அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை, அவள் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தாள், எதுகை மோனையற்ற எம் காதல் கவிதைகள் என.

இன்று எல்லாம் ஒருசேர மெளனித்திருந்தன

காதல் செய்தால், வலி தான் என்று அவள் தோழி சொன்னது உண்மை என தோன்றியது.

மூன்று வருடக் காதல், முக்கால் மணி நேர சண்டையில் முற்றுப் பெற்றதா?

மூச்சு முட்டியது அவளுக்கு.

சின்ன சின்ன ஊடல்கள் எப்போதும் உண்டு அவர்களுக்குள். அதுவும் காதலின் அடையாளம் தானே. ஆனால் சில நாட்களாய், ஊடல் பெருத்து சாடல்களாகின.

“உன்னால் தான் எல்லாம்” என இருவரும் இருவரின் மேல் புகார் கொடுத்துக் கொண்டனர். இன்று சரியாகும், நாளை சரியாகும் என நம்பிய இருவரும் என்றுமே சரியாகாது, என முடிவெடுத்து முடித்தனர், அவர்களின் காதல் அத்தியாயத்தை.

சூரியன் மறைந்து வெண்ணிலா வெளி வரும் நேரம். அவளிடம் கண்ணீரேக் கெஞ்சியது நாளை வருகிறேனே என. எழ எத்தனித்தப்போது பெரிய கிளையொன்று மரத்தை பிரிந்து மண்ணைத் தொட்டது. சத்தம் கேட்டு திரும்பினாள், அவனும் திரும்பினான் மரத்தின் மறுப்பக்கத்தில் இருந்து.

இதழ்கள் விரிந்தன, வார்த்தைகள் மட்டும் பின்னிதழில் சிக்கிக் கொண்டன இருவருக்கும்.

இது தான் சமயம் என, கண்கள் பேசத்துவங்கின.

முடிந்த காதல் அத்தியாயத்தை, மரக்கிளையை அர்ப்பனித்து சேர்த்த மரம், இலையில்லாமல் இன்னும் அழகாய் தெரிந்தது!!!

Sunday, June 19, 2011

குருவிக்குஞ்சு

வாடகை கொடுக்காத

சிட்டுக்குருவிகள் கூடு கட்டியப் பின்

இன்னும் ஒரு சொந்தம் கூடியது

என் அறைக்குள்,

எனக்கும் :)

--நிலாப்பெண்..

Thursday, May 12, 2011

காதல் வலை

காதல் உலகில் காலடி வைக்கையில்,

காற்று காதில் மெதுவாய் வருட

குயில்கள் கூட்டம் கானம் பாட

மரம் அசைந்து பூக்கள் தூவ

நிலவு ஒளியை இன்னும் கூட்ட

மழைத்துளி மண்ணில் எங்கும் படர

முகம் முழுக்க பூரிப்புடன்

கண்கள் சிரிக்கக் கனவுக் கொண்டு

மழலையாக துள்ளி மகிழ்ந்து

காதல் கோட்டைக்குள் வேகமாய் நுழைந்து

ஓடியாடி சில தூரம் கடக்கையில்,

காற்று புயலாய் மாறி கர்ஜிக்க

கிளைகள் ஆடி குயில்கள் பறக்க

வெள்ளம் பாய்ந்து பாதை மறைக்க

இருளின் ராஜ்ஜியம் எங்கும் விரிய

கண்கள் மூடி வெளிச்சம் தேட

வலையில் சிக்கிய கால்கள் நடுங்க

உணர்ந்தேன் பலியான கனவுகளை

கேட்டேன் காதலின் அரக்கச் சிரிப்பை..

--நிலாப்பெண் “புவனா”

Saturday, February 5, 2011

மடி..

கன்னியாய் இருப்பதை விட,
கணினியாய் இருந்திருக்கலாம்!
தேவை உன் மடி..

--நிலாப்பெண்..

பார்வை போதும்

என் கவிதைகளை
வார்த்தைகளால்
அலங்கரிப்பதில்லை..
உன் பார்வை போதும்,
அழகான கவிதையாய்
உருமாறி நிற்கிறது......

--நிலாப்பெண்..

என்னவனாய்...

அழுக போகும் போது,
முகத்தை மூடும் கைகளாய்..

ஆறுதல் தேடும் போது
அழுத்தி கொடுக்கும் முத்தமாய்..

இதயம் நோகும் போது
இழுத்து அணைக்கும் வெப்பமாய்..

ஈர்ந்து கரையும் போது
இலகுவாய் வருடும் விரல்களாய்..

உறங்க கெஞ்சும் போது
உற்று கொஞ்சும் கண்களாய்..

ஊக்கம் கொடுக்கும் போது
பறக்க வைக்கும் ஊஞ்சலாய்..

எட்டி போகும் போது
கட்டி கொள்ளும் மழலையாய்..

ஏங்கி கலங்கும் போது
தாங்கிச் சாயும் தலையணையாய்..

ஐயம் தோன்றும் போது
இருளை கிழிக்கும் நிலவொளியாய்..

ஒதுங்கி நிற்கும் போது
பாதம் தழுவும் கடலலையாய்..

ஓவியம் வரையும் போது
கையில் ஒட்டும் வண்ணமாய்..

அவ்வப் போது இல்லை,
முப்பொழுதும் வேண்டும் என்னவனாய்..

--நிலாப்பெண்..

Friday, November 12, 2010

ஐயகோ!!!




கருணாநிதியின்
கண்ணாடி பிளக்கப்பட்டு..
ஜெயலலிதாவின்
மூக்கு உடைக்கப்பட்டு..
ராஜபக்ஷேவின்
உடல் துண்டாக்கப்பட்டு..
சோனியா காந்தியின்
கைகள் வெட்டப்பட்டு..
மன்மோகன் சிங்கின்
தலைப்பாய் உருவப்பட்டு..
அத்வானியின்
ஆடை கசக்கப்பட்டு..
ரஜினியின்
முழங்கால் மடிக்கப்பட்டு..
ஸ்னேகாவின்
உதடு கிழிக்கப்பட்டு..
இன்னும் இன்னும்
பல பிரபலங்கள்...

மளிகை சாமான் கடையின்

பொட்டலங்களில்!!!

--நிலாப்பெண்..

Wednesday, September 1, 2010

வாழ்க்கையுடன் போராடு..


உன் சுயமரியாதைக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டால்,
வலியென வீழ்ந்துவிடாதே!
விழித்துக் கொண்டுப் போராடத் தொடங்கு....

தனிமை சிறையில் அகப்பட்டு கொண்டால்
இருட்டுக்குள் அடங்கிவிடாதே!
பிறர் வாழ்க்கைக்கு ஒளியேற்ற ஓடு...

வாழ்க்கை பாதையில் தடங்கல்கள் தடுத்தால்
தடுமாறி தளராதே!
விண்ணை தொடுவது போல் எகிறி தாண்டு..

தினம்தினம் உன் மேல் விழும் அடிகளால்
அடங்கி விடாதே!
நீ ஒவ்வொரு அடியாக முன்னேறுவதாய் நம்பு..

விதியென மூலையில் மூளையில்லாது
மழுங்கி விடாதே!
மதிக் கொண்டு வெல்வதை உலகிற்கு இயம்பு..

கூனிக் குறுகி கேள்விக்குறியாய் வாழ்ந்து
மாய்ந்து விடாதே!
நிமிர்ந்து நின்று ஆச்சரியக் குறியாக உயர்..

--நிலாப்பெண்..

Monday, August 30, 2010

வீரா!

வளைந்து குறுகினாலும்,
வீரத்தின் அடையாளம்.
உன் முறுக்கு மீசை!

மென்மை!

இருப்பக்க அரிவாள்
மென்மையாய் தீண்டுதே,
மீசைக்காரா!

--நிலாப்பெண் ..

வண்ணங்கள் விற்பனைக்கு..


நீலமும் சிவப்பும் ஒன்றாக,
வானமும் வட்டனும் அல்ல..
கருப்பும் வெள்ளையும் கட்டிக்கொண்டு,
ரஜினியும் ஸ்ரேயாவும் அல்ல..
மஞ்சளும் பச்சையும் பக்கத்திலேயே,
கட்சிக் கூட்டமும் அல்ல..
காவியும் சாம்பலும் பக்கத்திலேயே,
காஞ்சிபுர மடமும் அல்ல..


விதவை விற்கும் பாசிமணிகள்..
வெறும் பத்து ரூபாய்!

--நிலாப்பெண்..
==>வட்டன் -- சூரியனுக்கு நான் சூட்டிய செல்ல பெயர்..

கனவுக்குள்ளே..


நேற்று நீ கனவில்
வருவதாய் சொன்னாய்..
நானும் கண்விழித்து
காத்திருந்தேன்..
உன் நினைவுகளின்
ஊடே கனவுக்குள்ளும்
கள்ளத்தனமாய்
எப்படி புகுவாயென?
ஆனாலும் வந்து தான்
விட்டாய்..
தற்செயலாய்
கண் சிமிட்டுகையில்,
தொட்டில் கட்டி,
எனை தாலாட்ட...


--நிலாப்பெண்..

தூக்கமின்மை..

ஏனோ என் இரவுகள்,
இப்பொழுதெல்லாம்
முடிவதே இல்லை..
பொழுது புலர்ந்த பின்னும்
பெரிதாய் மாற்றம்
உணர்வதில்லை..
இயற்கை வரைந்து விட்ட
கண் மையாய்,
கருவளையம்
கவிழ்ந்து நிற்க...
கனவுகளின் ஊடே
வரும் தூக்கத்தை
துரத்திக் கொண்டு நான்..

காரணம்?
கரண்ட் இல்லா
கோடைக் காலம் மட்டுமல்ல,
தற்போது தேர்வுக்காலம் கூட

--நிலாப்பெண்..

காதலினால்..


உன் பெயரின் அர்த்தம் கேட்டேன்,
தெரியாது "புவி' என்றாய்..
என் பெயர் அர்த்தம் பெற்றது!!!

--நிலாப்பெண்@ புவி:)

அழகான வார்த்தைகள்..


உன்னை பற்றி
கவிதை எழுதுகையில்,
நான் திரும்ப திரும்ப
திருத்துவதே இல்லை..
வார்த்தைகள் எல்லாம்
இடம் தேடி அமர்கிறது
உன்னை பற்றிய
கவிதை என்றதும்!

--நிலாப்பெண்..

வாழ்கையாம் வாழ்க்கை!!!


வேதனை தலைத்தூக்கும் நேரம்,
தலைக்குனியும் தன்னம்பிக்கை..

சுடும் வார்த்தைகளின் முன்,
சுடுகாட்டில் சுயமரியாதை..

கண்ணீரின் வரவறிந்து,
சென்றுவிடும் சிரிப்பலை..

மரியாதை மிதிப்படுகையில்,
மறைந்துவிடும் மனிதநேயம்..

இழப்புகள் இறுதிவரை தொடர,
வரவுகள் மட்டும் வக்கனாய்..

வாழ்க்கையாம் வாழ்க்கை!
மனிதராம் மனிதர்!!

--நிலாப்பெண்..

மழைக் காதல்..


நீ குடை விரிப்பதற்குள்
உன்னை தொட்டு விட்ட
மழைத்துளிகளை பார்த்து,
இன்னும் கறுத்தது வானம்,
என் முகமும் தான்...

--நிலாப்பெண்

Thursday, August 26, 2010

உணர்வின் உணர்வு!


மரணித்த பின்பு
தானே புதைப்பார்கள்,
நானோ புதைக்கிறேன்
உயிர்பெறும் உணர்வுகளை!

அடக்காத உணர்வுகள்
உயிரை குடிக்காது,
குதறி விளையாடும்
உயிரின் வேரினை!

காயத்தின் ரத்தம்
உறைந்து போகும்,
படிந்து விடுமே
பலமாக வடுக்கள்!

பத்திரமாய் புதைக்கிறேன்
உணர்வுகளை ஆழத்தில்,
ஒடுக்கப்பட்ட உணர்வுகள்
ஒய்யாரமாய் கர்ஜிக்கிறது!

ஒடுக்கப்படலாம்,
ஒழிக்க முடியுமா என?

--நிலாப்பெண்..

கவிதையின் கதை..


நீ உயிருக்குள்
ஊடுருவியதால்,
உயிர் பெற்ற எழுத்துக்கள்
பிணைந்து நின்று,
கவிதைகளாக
வெறியாட்டம் போட்டன..

நீ பார்க்கும் வேளைகளில்,
பல்லிளித்து நின்றன..

நீ பேசிய ஒருசில
வார்த்தைகளை கேட்டு,
கோடி வார்த்தைகள்
முட்டிக் கொண்டன,
உன்பற்றிய கவிதைகளுக்குள்
எப்படியேனும் நுழைந்துவிட..

அழகான கவிதைகளென,
புன்னகைப் பூத்தாய்..
ஆரவாரமிட்டு கூச்சலிட்டன
உன்னால் பிறந்த,
கவிக் குழந்தைகள்..

மெள்ள நீ விலகிசெல்கையில்
வீரிட்டு அழுதன கைக்குழந்தையாய்..

முற்றிலுமாக விட்டுச்சென்றாய்,
மரணப்படுக்கையில்
மெளனித்தன கவிதைகள்!

--நிலாப்பெண்..

Thursday, March 11, 2010

நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..


செல்லும் பாதையில்,
நாணயம் ஜொலிஜொலிக்க..
கண்டும் காணாமல் நான்!
என் "நாணயதைக்" காப்பாற்றி..

அதே பாதையில்
கத்தையாய் நோட்டு,
சில்லறையாகிப் போனது
என் "நாணயம்"!!!

--நிலாப்பெண்..

அமாவாசை அறியாச் சிறுமி..


அமாவாசை அறியாச் சிறுமி..
நிலவுத் தொலைந்துவிட்டதா?
எப்படி தொலைந்திருக்கும்?
நேற்றுக் கூட பார்த்தேனே?
நல்லாத் தானே இருந்தது?
யாருடனாவது சண்டையோ?
தனிக்கட்டை யாரோடு சண்டையிடும்?
நட்சத்திரங்கள் வம்பிழுத்திருக்குமோ?
நாலாப்பக்கத்திலும் இல்லையே?
கீழக் குதித்துத் தற்கொலை பண்ணியிருக்குமோ?
நாளிதழில் செய்தி வருமோ?
நிலவுக்கு என்னாச்சோ?
யாருமே கவலைப்படலையே?
அம்மா அடுப்படிக்குள்ளேயே?
அப்பா அலுவலகத்திலேயே?
நிலவு கண்ணாமூச்சி காட்டுதோ?
நாளைக்கு வந்திருமோ?
காத்திருக்கிறேன்..

--நிலாப்பெண்..

இடமாற்றம்..


பசி வயிற்றை கிள்ளவில்லை,
பேருந்தில் இடையைக் கிள்ளியது..

கொடூரனின் காமப்பசி!

--நிலாப்பெண்..

போனப் பின் ஏது?


அவன் பையில் ஒரு ரூபாய்!
எல்லோருக்கும், அவன் செல்லாக் காசு..

பிணத்தின் நெற்றியில் ஒரு ரூபாய்,
அத்தோடு, செல்லும் காசு..


--நிலாப்பெண்..

நிறைவு..


என் நோட்டுப் புத்தகத்தில்
பலக் கவிதைகள்
முடித்தும்,
முடிவுப் பெறாமலே..
நீ ஒரு முறையாவது
படித்தால் தானே,
என் கவிதைக் கூட
"நிறைவு" பெறும்....

--நிலாப்பெண்..

நான் யாரெனில்?


தினம் தினம் அவமானப்படுவேன்.
சுற்றத்தார் சுமத்தும் பழிகளை,
சுமைத் தாங்கியாய் சுமப்பேன்.
கணவன் கள்ளத்தொடர்பைக் கூட,
கண்ணியமாய் ஆதரிப்பேன்.
மாமியார் கொடுமைகளை
கண்ணீருடன் பெறுவேன்.
நாத்தனாரின் நடத்தையைக் கண்டு
உள்ளம் பொங்கி அழுவேன்.
குழந்தைகளுக்காகவே குமுறலுடன்
காலம் கழிப்பேன்.
ஒருநாள் வேறு வழியின்றி,
பொங்கி எழுவேன்.
வீட்டை விட்டு வெளியேறி,
கைநிறைய காசு பார்ப்பேன்.
கார், பங்களா எல்லாம்
கலர் கலராய் சொந்தமாக்குவேன்.
கணவனே வந்து காலடியில்
விழும்படி செய்வேன்.
நான் யாரெனில்,
பெண்களே கொஞ்சம் கண்ணீரை
துடைத்து விட்டு பாருங்கள்..
நானே,

"உம் சீரியல் நாயகி"!!!!!!!!!!!!

--BY சீரியல் பார்காத ""நிலாப்பெண்..."

Sunday, October 18, 2009

மழைக் காதல்..


நீ குடை விரிப்பதற்குள்
உன்னை தொட்டு விட்ட
மழைத்துளிகளை பார்த்து,
இன்னும் கறுத்தது வானம்,
என் முகமும் தான்...

--நிலாப்பெண்

Thursday, September 3, 2009

சிதறி சிறைப்பிடித்த இதயம்..


காதலுக்கு முன்:

சிரிக்காமல் சென்று
இதயத்தை சிதறடித்தாய்...

காதலுக்கு பின்:

சிரித்து சிரித்து
இதயத்தில் சிறைப்பிடித்தாய்..

--நிலாப்பெண்..

வாசகி தானே?


உனை வாசித்தப்பின்
முறையாய் நான்
வாசகி தானே?
எனை எப்படி
கவிஞர் ஆக்கினாய்?

--நிலாப்பெண்

நிலவாம் நிலவு...


வட்டப் பொட்டு
வச்சாத் தான்
உனக்கு பிடிக்கும்னு
நான் வச்சேன்..
இருட்டினதும்,
ஈனச்சிறுக்கி
வானமும்
வட்டப்பொட்டோட
நிற்கிறாளே

--நிலாப்பெண்..

எப்படி மறந்தேன்...


மனதின் கனம்,
இறக்கி வைக்க
தேடுகிறேன் யாரையாவது..
உயிர் தோழியோ
தொலை தூரத்தில்..
அலுவலக வலைக்குள்
வேண்டியவர்கள்..
செல்லிடைப்பேசிக்குள்
சிக்கியிருக்கும்
நூற்றுக்கும் மேற்பட்டோர்
எண்கள்...
திரும்ப திரும்ப
பார்க்கிறேன்.........
பெயர்களை மட்டும்..
யாரிடம் பகிர்வது?
யாருடைய நேரத்தையாவது
களவாடி என் துயர்
மறக்க வேண்டுமே!
பரந்த உலகில்
கோடிப்பேர்,
அவரவர் வாழ்கையை
தேடிக் கொண்டு..
செவி சாய்க்க
எவருமில்லை எனக்கு..
"திடீர் வெளிச்சம்"
அட! அருகிலேயே நீ..
எப்படி மறந்தேன்
என் இனத்தவளை?
அமைதியாய்,
முகம் சுளிக்காமல்,
என் கதைக்கேட்கும்
உன்னை..
என் தேவதை பொம்மையே!

--நிலாப்பெண்..

இனி சிறகெதற்கு?


சிறகுகள் இருந்தால்
பறந்து வந்து
பக்கத்திலேயே இருப்பேன்,
உன்னுடனேயே எப்போதும்........
சிறகுகளை உடைத்து விட்டு,
சுதந்திரமாக..

--நிலாப்பெண்..

Tuesday, June 23, 2009

என் "எதற்கு காதலர் தினம்..." கவிதை ஆனந்த விகடனில்

நீ முதன்முதலாய் எனை பார்த்த நாள்..

நீ பார்த்து புன்னகை செய்த நாள்..

உன்னோடு கைக்குலுக்கிய நாள்..

பேருந்தில் உன்னருகில பயணித்த நாள்..

செல்லிடைப்பேசிக்கு உன் அழைப்பு வந்த நாள்..

நீ அறியாமலேயெ உனை பின் தொடர்ந்த நாள்..

எனக்கு பிடித்த நிறத்தில் உடையணிந்த நாள்..

மழை நாளில் உன் குடைக்குள் நுழைந்த நாள்..

உன் தோட்ட ரோஜாவை என் மேசையில் வைத்த நாள்..

என் வெட்கம் காண நீ கண்ணடித்த நாள்..

அழகாய் சிரிக்கிறாய் எனக் கவிதை சொன்ன நாள்..

எனக்கு பிடித்த புத்தகத்தை பரிசளித்த நாள்..

காதலை சொல்வதற்கு பதில் காபி சாப்பிடீங்களா என உளறிய நாள்..

தட்டுத்தடுமாறி கடைசியாய் காதலை சொன்ன நாள்..

நானும் காதலிக்கிறேன் என்றதும் பரபரப்பில் "நன்றி" சொன்ன நாள்..

இரண்டு நாட்கள் எனை காணமல் வீட்டிற்கே வந்த நாள்..

காய்ச்சல் குணமாக காவடி எடுத்த நாள்..

என் கண்ணில் தூசி விழுந்ததற்காக நீ கண் கலங்கிய நாள்..

எதிர்பாராமல் ஒரே நிற உடையில் சந்தித்த நாள்..

உன்னோடு கைக்கோர்த்து நடந்த நாள்..

இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்த நாள்..

முதன்முறையாய் உனை காண நான் காத்திருந்த நாள்..

செல்லமாய் என்னிடம் கோபித்து கொண்ட நாள்..

என் சமையல் என்பதற்காக உப்பில்லா உணவையும் உவகையோடு உண்ட நாள்..

இதமாய் உன் தோள் சாய்ந்து உறங்கிய நாள்..

தோல்வியின் போது உன் மடியில் முகம் புதைத்து அழுத நாள்..

வெற்றியின் போது உன் கரம் பிடித்து மகிழ்ந்த நாள்..

இத்தனை நாட்கள் கொண்டாட இருக்க..

நமக்கெதற்கு தனியாய் "காதலர் தினம்"

--நிலா பெண்.. 

Thursday, June 18, 2009

் என்ன அவசரம்..


அடிக்கடி முறைத்துப் பார்ப்பாய்

கண்டுக்கொள்ளாமல் வந்துவிடுவேன்..

என் வீட்டு செல்ல நாய்க்கு

உன்னை கண்டால் மட்டும்

கொள்ளைக் கோபம் வரும்..

உடல் முழுதும் அப்பிய மையாக

உருவம் கொண்டவன் நீ..

உன்னளவுக்கு இல்லை எனினும்

ஓரளவுக்கு கருப்பானவள் தானே நானும்,

ஆதலால் ஒரு இரக்க உணர்வு

இதயத்தின் ஓரத்தில்...

அன்று அம்மா கடைவீதி சென்றதை

நீ கவனித்தாய் என்பதை

நானும் கவனித்தேன் ..

சன்னல் கதவை சாத்திவிட்டு

வீட்டு கதவையும் தாழிட்டேன்..

மின்னலாய் உன் வாடிய முகம்

மனதில் தோன்றி மறைந்தது..

தடதடவென பாத்திரங்கள்

விழுந்த சத்தத்தால்,

அடுப்பறைக்குள் அடிமேல்

அடிவைத்து சென்றேன்..

மீசையை முறுக்கி கொண்டு நீ.

ஏய்! திருட்டு பூனையே

உனக்கு பால் வைக்க தானே வந்தேன்....

அதற்குள் என்ன அவசரம்..

--நிலாப்பெண்

Sunday, June 14, 2009

வாழ்க்கையுடன் போராடு..


உன் சுயமரியாதைக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டால்,

வலியென வீழ்ந்துவிடாதே!

விழித்துக் கொண்டுப் போராடத் தொடங்கு....

தனிமை சிறையில் அகப்பட்டு கொண்டால்

இருட்டுக்குள் அடங்கிவிடாதே!

பிறர் வாழ்க்கைக்கு ஒளியேற்ற ஓடு...

வாழ்க்கை பாதையில் தடங்கல்கள்

தடுத்தால்தடுமாறி தளராதே!

விண்ணை தொடுவது போல் எகிறி தாண்டு..

தினம்தினம் உன் மேல் விழும் அடிகளால் அடங்கி விடாதே!

நீ ஒவ்வொரு அடியாக முன்னேறுவதாய் நம்பு..

விதியென மூலையில் மூளையில்லாதுமழுங்கி விடாதே!

மதிக் கொண்டு வெல்வதை உலகிற்கு இயம்பு..

கூனிக் குறுகி கேள்விக்குறியாய் வாழ்ந்துமாய்ந்து விடாதே!

நிமிர்ந்து நின்று ஆச்சரியக் குறியாக உயர்..

--நிலாப்பெண்..

ஏய் தமிழனிமே!


இனிமேல் தண்ணீரை
தாராளமாகவேக் குடியுங்கள்..
உயிர் இழந்திருக்கும்
ஈழத்தமிழர்களுக்கு கண்ணீர்
சிந்தவல்ல...
மானம் இல்லாதிருக்கும்
அரசியல் முதலைகளின்
முகங்களில்
காரி உமிழ்வதற்காகவே..
--நிலாப்பெண்..

துயரம்..


தூக்கியெறியப்பட்ட என் கனவுகள்,
தூங்க கூட முடியா துக்கம்,
துவண்டு போன தேகம்,
தேடியலைகிறேன் பாசத்தின் தடத்தை,
தொலைந்துப் போன பாதையிலும்
துரத்தி வரும் துன்பங்கள்..
திண்டாட்டங்களில் தட்டுத்தடுமாறி,
தவிடுப்பொடியான தருணங்கள்,
தீர்வுக்கூட வேண்டாம்,
திருப்பம் கூட இல்லையே..
துரதிர்ஷ்டத்தை தழுவிக் கொண்டு
தடுமாறும் வேளைகள்
துயரம் மட்டுமே துணையென
தூணில் சாயவும் தெம்பின்றி
துணிச்சலாய் சாகவும் தெளிவின்றி
தனிமையில் தவிக்கும் எந்நிலை
தயவுசெய்து வரவேண்டாம் யாருக்கும் தரணியிலே!!!
--நிலாப்பெண்..

ஈழத்தில்................


பிஞ்சு பாதங்களும்
பிறக்கா மழலைகளும்
சிதறுத் தேங்காய்களாய்!
பள்ளிக் குழந்தைகளும்
பருவ மங்கைகளும்
கிழிந்த ஆடைகளாய்!
வயது வந்தவரும்
முதிர்ந்த வயதினரும்
உடைந்த பொம்மைகளாய்!
இளம் காளைகளும்
எண்ணற்ற சகோதர்களும்
சாய்ந்த மரங்களாய்!
இதையெல்லாம் அறிந்தும்
ஐ.பி.எல் ஆட்டத்தையும்
நமிதாவின் நடனத்தையும்
நகராது பார்க்கும்
பிணங்களாய் நாம்!!!!!!
--நிலாப்பெண்..

மரண வாசல்..


தூக்கத்தைத் தூக்கிலிடும்
கண்ணீர்த் துளிகள்
இடைவேளையின்றி
இமைகளின் இடையில்..
என் துக்கங்கள்
பல நேரங்களில்
தொண்டைக் குழிக்குள்
புதைக்கப் பட்டது..
வீறிட்டு அழத்
திராணியற்று
திணறுபவளாய்...
அழுபவர் கோழை
ஐந்து வயதில்
இருந்த ஞானம்,
தனிமை துணைக்கு
வந்தப் பின்
மறந்துப் போனது...
அழுது சிவந்த கண்களை
கண்ணாடியில் காண்கையில்
கள்ளிப்பால் கொடுக்காதவரை
பெரிதாக நொந்துக் கொண்டேன்..
ஒவ்வொரு இரவும்
நாளையாவது விடியும்
எனும் நப்பாசையும்
நலிந்து போனது..
இதய ரணங்களுக்கு
மருந்து போட
மனமில்லை...
மரணத்தின் வாசலில்
மறைந்து போகும்
எண்ணத்துடன்.....................
--நிலாப்பெண்..

முகம்..


நீ நூலகம்செல்கையில்

நானும் நூலகம்வருவது,

சத்தியமாய்

உன் முகம் படிக்க மட்டுமே..

--நிலாப்பெண்..

மழலையின் மருகும் குரல்..


கருவறைக்குள் இருக்கும் மழலையின் தகிக்கும் தவிப்புக் குரல் இங்கே.. இல்லை இல்லை ஈழத்திலே...


இருட்டுக்குள் இருக்கிறேன்..

ஆனாலும் இதமாக இருக்கிறேன்..

வெளிச்சத்தை பார்க்கும் முன்னேவ

ெடிச்சத்தம் கேட்கிறதே!!

கருவறைக்குள்ளேயே கருகிப்போவேனா,

வெளியுலகிற்கு வந்து வெந்துப்போவேனா?

பூவாத் தலையா போட்டு பாருங்களேன்!!

அப்பா நேற்றே இறந்துப்போனாராம்,

மயங்கி கிடக்கும் என் தாயே,

நீ விழித்தவுடன் நம்மை அழித்துவிடுவர் தானே?

ஆதலால் விழித்துக் கொள்ளாதே அம்மா..

உன் ஈரவிழிகளையும்

நம் ஈழவலிகளையும் பார்க்கவா,

ஈரைந்த்து மாதங்களாய் உனக்குள் இருக்கிறேன்??

இறந்து போகலாம் வா தாயே,

இந்திய இறையாண்மையும்

அதைத்தானே விரும்புகிறது!!!

--நிலாப்பெண்.

பொம்மை..


காதலிக்கும் போது அதிகமாய்

பொம்மைகளை தான் பரிசளித்தாய்..

அப்போது உணரவில்லை..

திருமணத்திற்கு பின்

உணர்ச்சியற்ற பொம்மையாக

என்னையும் நடத்துவாய் என!!

--நிலாப்பெண்..

Thursday, April 16, 2009

ஜாக்கிரதை..

உன் வீட்டு தினசரி பத்திரிக்கையை

நான் தான் கடத்துகிறேன்..

உன் முகத்தை என்னிடமிருந்து

மறைக்கும் எதற்கும் இந்நிலை தான்..

--நிலாப்பெண்..

Monday, November 24, 2008

தொலைந்து விட்டேன்...

காதலித்து தொலைத்து விட்டேனே,
அட! கோபப்படாதே...
காதலித்தனால் தொலைந்து விட்டேன்...

--நிலா பெண்

வீழ்ந்துவிட்டேன்...

யாரும் தள்ளிவிடவில்லை,
தடுக்கி விடவும் இல்லை,
எப்படி வீழ்ந்தேன் என்று புரியவில்லை,
.
.
.
.
.
.
.
.
உன் கன்னக்குழியில்....

--நிலா பெண்..

அவலம்

கருவிலேயே சிதைத்திருந்தால்
மனித உரு மிருங்கங்களிடம்
சிக்கி சிதைந்திருக்க மாட்டேனே,
அனாதை...
நிலா பெண்..

காகித மலரும் அழகே..

ரோஜா, மல்லிகை 
இரு மலர்களும் பிடிக்குமெனிலும்,
நீ தலையில் சூடிவிட்டால்
காகித மலரும் பிடிக்கும்..

--நிலா பெண்

அறைகூவல்

உன் நுரை ஈரலின் அறைகூவலை,
போதை தெளிந்தும் உணரவில்லையே..

-நிலா பெண்..

Thursday, November 20, 2008

--நீ கிறுக்கிய மலர்கள்...--

அட!

நீ விளையாட்டாய்

என் உள்ளங்கையில் கிறுக்கிய

மலர்களிலும் மணம் வீசுதே!

--நிலா பெண் .

பறக்கிறேன்..

பறவை சிறகை விரித்தால் தான் பறக்கும்..
நீ இதழை விரித்தாலே நான் பறப்பேன்.. 

--நிலா பெண்..

தேவை தோழமை..

தோழமையும் தேவை தான்
உன்னிடம் சொல்ல முடியா என் காதலை,
அவர்களிடமாவது பகிரமுடிகிறதே..

--நிலா பெண்

திருநங்கைகள்

உறுப்புக்களில் கோளாறானாலும்
உள்ளத்தில் மனிதர் தானே!!!


--நிலாப்பெண்

அலை...

என்றோ ஒரு நாள் கடலலைகள் 
உன் பாதம் தொட்டிருக்க வேண்டும்..
மீண்டும் தொடவே ஓய்வின்றி கரை வருகிறது..

--நிலா பெண்

-விழி பேசுகிறதே..--

உன் இதழ்கள் பேசும் வார்த்தைகளை விட,

உன் விழிகள் பேசும் வார்த்தைகளே

சத்தமாக கேட்கிறது..

எனக்கு மட்டும்!

--நிலா பெண் ..

மழை...

மழை துளிகள் இம்மண்ணில் சிதறும் பொழுது...

மன குறைகள் விண்ணிற்கே செல்லுகிறது...

--நிலா பெண்

நிலா முகம்

தினமும் நிலவின் முகம் பார்த்து மகிழ்வதுண்டு,
நிலவை உன் கண்கள் சந்தித்திருக்க கூடும் என்று..

--நிலா பெண்

பார்வை போதும்...

கத்தியெல்லாம் தேவை இல்லை
உன் கடைக்கண் பார்வை போதும்
என்னை குத்தாமலேயே கொல்வதற்கு....

--நிலா பெண்..

--என் சுவாசமே...--

எல்லோரும் மூச்சுக்காற்றை சுவாசித்து வாழ்கின்றனர்;

நானோ உன் மூச்சுக்காற்றை மட்டும் சுவாசிக்க வாழ்கின்றேன்..

-நிலா பெண் ..

சிரிக்காதே...

தோண்டாமலே உருவான குழியில்,
வேண்டுமென்றே விழுந்தேன்..
சிரிக்காதே... பிறகு,
மீண்டும் மீண்டும் விழுவேன்
உன் கன்ன
கு
ழி
யி
ல்..

--நிலா பெண்

--அவசர கடிகாரம்..--

உன் கைகடிகாரத்திற்கு தான் எத்தனை அவசரம்,

ஏனோ நான் உன்னிடம் பேசும் போது மட்டும்

ஒலிம்பிக்கில் ஓடுவது போல ஓடுகிறது..
-
நிலா பெண்..

3ஆம் உலக போர்..

மூன்றாம் உலக போரை ஆதரிக்கிறேன்..
உன்னிடம் தஞ்சம் புகுவதற்காக..

--நிலா பெண்..

கொஞ்சும் தமிழ்..

உன்னை கொஞ்சியே தமிழ் வார்த்தைகள் தீர்ந்து விட்டனவே..

தமிழ்தனை விரிவாக்க அகத்தியனிடம் மனு கொடுக்கவோ..

--நிலா பெண்

சிரிக்காதே..

நீ சிந்திவிட்டு போன 
சிரிப்பில் தான் நான் 
சிதறி போனேன்,
என்பதை எப்போது உணர்வாய்..

--நிலா பெண்

இதயமே......................

எனக்கு அடிப்பட்டதற்காக,
நீ துடித்தாய் என
அறிந்ததில் இருந்து..
துடிக்க மறுக்கிறது
என் இதயம்...

--நிலா பெண்

எப்படி சொல்வதென்ன...........

ஒவ்வொரு முறையும் 
காதலைச் சொல்ல தான் 
நினைக்கிறேன்,
முடியவில்லை...
எப்படி சொல்வதென்ன 
ஒரே ஒரு முறை கூறிவிடேன்.. 

--நிலா பெண்

தனிமையும் இனிமை..

தனிமையை போன்ற கொடுமை இல்லை தான்,
தனிமையோடு உன் நினைவுகள் இருந்தால்,
வேறு இனிமையும் இல்லையடா...

--நிலா பெண்

மயங்கினேன்........

மயக்கம் தெளிவிக்க தண்ணீர் தெளித்தாய்,
மயக்கியவனே நீ என்பதை அறியாமல்...

--நிலா பெண்

பார்வை போதும்...

கத்தியெல்லாம் தேவை இல்லை
உன் கடைக்கண் பார்வை போதும்
என்னை குத்தாமலேயே கொல்வதற்கு....

--நிலா பெண்.

*நிலவே..*

வட்டமிட்ட முகத்தை கொண்டவளே !!
திட்டமிட்டு என் அகத்தை வென்றவளே !!
தொட்டுவிட்டால் கரைந்து விடுவாய் என்பதாலா..
முற்றத்திற்கு மேலே உள்ளாய்…
எட்டி நின்று பார்த்தாலும்
கட்டுக்கடங்கா சந்தோசத்தில்..
மெட்டு கட்டி பாட தோன்றுதே
நிலவே …என்.. வெண்ணிலவே..


---நிலா பெண்

ஆசைப்படுகிறேன்...

உன்னை பிரதிபலிக்கும் கண்ணாடியை இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே உடைந்து போவேன் என்று தெரியாமலேயே..

உனக்கு நிழல் கொடுக்கும் மரமாய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே சாய்ந்து விடுவேன் என்று தெரியாமலேயே..

உனக்கு ஒளி தரும் விளக்காய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே அணைந்து விடுவேன் என்று தெரியாமலேயே..

உன் செவிக்கு இசையாய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே ஊமையாகி நிற்பேன் என்று தெரியாமலேயே..

உன்னை கரை சேர்க்கும் படகாய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே மூழ்கி விடுவேன் என்று தெரியாமலேயே..

உனது கனவுகளை நிஜமாக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே என் நினைவுகளையும் இழப்பேன் என்று தெரியாமலேயே..

உன் இதழ்ளில் புன்னகையாய் மாற ஆசைப்பட்டேன்,
உன்னாலே விழிகளிலே நீர் சுமப்பேன் என்று தெரியாமலேயே...

இன்னும் ஆசைப்படுகிறேன் உனை மட்டும்,
உன்னாலே எனதாசை நிராசை ஆகும் என்று தெரிந்துமே..

--நிலா பெண்

பெண் சிசு..

பெற்றவளும் பெண்,
உற்றவளும் பெண்,
பிள்ளை மட்டும் பெண்
என்றால்,
பிழையா?
பித்தர்களே!

--நிலா பெண்..

உயிரே..

மண்ணை விட்டு போக சொன்னாலும் போவேன்..
உன்னை விட்டு போக சொல்கிறாயே..
உன்னை நீங்காமலே வாழ்வதாயின்..
ஒரு நொடி கூட தூங்கமாலே,
உன்னை தாங்கி கொள்வேன்..
மரண பயத்தை கூட உயிர் தாங்குது..
உன் பிரிவை நினைத்தாலே
உயிர் நோகுது..
உன் இதழ் ஓர புன்னகையில் தான்
என் உயிர் நாடி உள்ளது..
நீ என்னை சாட்டையால் அடித்தாலும்
சிரித்து கொள்வேன்..
என் கனவு கோட்டையை இடித்து விடாதே..
தெரியும் எனக்கு..
ஒரு நாள்..
உன் மௌனம் கலையும்..
என் பாசம் உன்னிடம் பேசும்..
என் நேசம் உன்னை தழுவும்..
எது வரை என்கிறாயா?
என் சுவாசம் நிற்கும் வரை..
இல்லை இல்லை..
என் சுவாசம் நின்ற பின்னும்..

--நிலா பெண்

என் நினைவே

நான் மிகவும் கவனமாக தான் இருக்கிறேன்,
உன் நினைவை தவிர்த்து 
வேறு நினைவுகள் வரமாலிருக்க..

--நிலா பெண்

சிரி..

நீ வாய்விட்டு சிரித்தால் 
என் நோய் விட்டு போகும் அல்லவா...

--நிலா பெண்..

--அணியா அழகு..--

எனக்கு பிடிக்கும் என்று

நீ வாங்கி கொடுத்த கண்ணாடி வளையல்கள்,

உடைந்து விடுமோ என்று

அணியாமலே அழகு பார்க்கிறேன்..

--நிலா பெண் ..

மௌன விரதம்..

நீ என்னுடன் பேசாத நாட்களில் மட்டுமே 
மௌன விரதம் இருக்கிறேன்... 

--நிலா பெண்

என் நினைவே

நான் மிகவும் கவனமாக தான் இருக்கிறேன்,
உன் நினைவை தவிர்த்து 
வேறு நினைவுகள் வரமாலிருக்க..

--நிலா பெண்

அன்பே..

ஏன் என்னை சாகச்சொல்லாமல் 
உன்னை விட்டு போகச்சொன்னாய்..
ஓ!இரண்டும் ஒன்றென தெரிந்திருந்தா?

--நிலா பெண்..

என் கவிதை......

பத்து மாதம் சுமக்கவில்லை... 
பிரசவ வலியில் துடிக்கவில்லை...
காதல் மட்டுமே செய்தேன்...
பிறந்தது என் கவிதை குழந்தை...

--நிலா பெண்..

நீ இல்லாமலா?

உன் உள்ள அறையில் ஒரு இடம் கொடு,
இல்லையெனில் கல்லறையில் இட்டு விடு..
--நிலா பெண்..

காதல்

காதல் வாழ்க்கையின் ஒரு பகுதியாமே?
எனக்கு, வாழ்க்கையே காதலின் ஒரு பகுதி தான்...

---நிலா பெண்

எழுதுகோல்..

உன்னவனை பற்றி,
நான் எத்தனை கவிதை எழுதியுள்ளேன் தெரியுமா??
கேலி செய்கிறது எனது எழுதுகோல்்..

--நிலா பெண்..

விடியல்...

எப்படியாவது என் அறைக்குள் நுழையும் சூரிய ஒளிக்கு தெரிவதில்லை,
எனக்கு விடியல் நீ விழிக்கையில் தான் என்று!!!

--நிலா பெண்..

என் ஓவியமே..

ரவிவர்மாவின் ஓவியத்தை ரசித்தப்படி "நீ"
இல்லை.. இல்லை..
ரசித்தப்படி இன்னொரு "ஓவியம்"!!!

--நிலா பெண்..

தொழிலாளி இல்லையெனில்...

சாக்கடையை சுத்திகரிக்கும் 
தொழிலாளி இறந்ததால்,
மருத்துவரின் "கல்லா" நிறைந்தது..

--நிலா பெண்

யார் கவிதை...

நான் எழுதியதால் இது என் கவிதையா?
உன்னால் எழுதியதால் உன் கவிதையா?

--நிலா பெண

புரியவில்லை

சிரித்துக்கொண்டே 
உன் இல்லத்திற்குள் தானே போனாய்..
எப்போது
என் உள்ளத்திற்குள் நுழைந்தாய்??

--நிலா பெண்

துயரம்..

தூக்கியெறியப்பட்ட என் கனவுகள்,

தூங்க கூட முடியா துக்கம்,

துவண்டு போன தேகம்,

தேடியலைகிறேன் பாசத்தின் தடத்தை,

தொலைந்துப் போன பாதையிலும்

துரத்தி வரும் துன்பங்கள்..

திண்டாட்டங்களில் தட்டுத்தடுமாறி,

தவிடுப்பொடியான தருணங்கள்,

தீர்வுக்கூட வேண்டாம்,

திருப்பம் கூட இல்லையே..

துரதிர்ஷ்டத்தை தழுவிக் கொண்டு

தடுமாறும் வேளைகள்

துயரம் மட்டுமே துணையென

தூணில் சாயவும் தெம்பின்றி

துணிச்சலாய் சாகவும் தெளிவின்றி

தனிமையில் தவிக்கும் எந்நிலை

தயவுசெய்து வரவேண்டாம் யாருக்கும் தரணியிலே!!!

--நிலாப்பெண்..

பெண்மை காதல்..

பருவத்தின் வேகத்தை சந்தித்தேன் உன்னை சந்தித்ததும்...

பாவை என் மனதில் பாசத்தை கண்டேன் உன்னை கண்டதும்..

பிரிவின் வேதனையை உணர்ந்தேன் நீ விலகியதும்..

பீச் [beach] காற்றும் சில்லென்று சுட்டது நீ என்னை தொட்டதும்..

புன்னகையின் அர்த்தத்தை அனுபவித்தேன் உன் கனியிதழ் விரிந்ததும்..

பூவின் மனதை பார்த்தேன் நீ தலையசைத்து மகிழ்ந்ததும்... 

பெண் என் மனம் பொன்னாகுது உன்னை நினைத்ததும்..

பேதை என் பாதையை உணர்ந்தேன் உன்னை உணர்ந்ததும்...

பொழுதின் வண்ணத்தை விழித்திருந்து கண்டேன் உனை கனவாக...

போராடியது பெண்மையின் உள்ளம் உனை காணாததும்..

பெளர்ணமி நிலவாய் கரைந்தது நம் காதல் உனை இழந்ததும்..

--நிலாப்பெண்..

பார்த்ததால்

ஒவ்வொரு நாளும் உன்னை எதிர்ப்பார்க்க ஆரம்பித்தது,
எதிர்பாராமல் ஒரு நாள் பார்த்ததால் தான்...

--நிலா பெண்..

எதிர்பாராமல் உன்னை ஒரு நாள் பார்த்ததற்காகவா,
ஒவ்வொரு நாளும் எதிர்ப்பார்க்கிறேன், "அதே நாளை"?

--நிலா பெண்.

எதிர்ப்பாராமல் ஒரு நாள் பார்த்து சென்றாயே...
எதிர்ப்பார்க்கிறேன் நீ மறுபடியும் பார்க்கும் நாளை..

--நிலா பெண்..

எதிர்பாராமல் உன்னை பார்த்த நாள் கூட,
என் முகம் பாராமல் ஏன் சென்றாய்...

--நிலா பெண்

என்னை தான் எதிர்பார்க்கிறாய் என்பதை
உன் விழி பார்வையே சொன்னதடா..

--நிலா பெண்..

எதிர்பார்த்தது எல்லாம் நடக்க வேண்டாம்...
என்னை எதிரில் பார்த்த பின்னாவது நின்றிருக்கலாமே..

--நிலா பெண்

எதிர்காலத்தில் நான் எதிர்பார்த்தது எல்லாம்,
உன்னை எதிரில் பார்த்த பின் நடக்கும் என்று நம்பினேன்..

--நிலா பெண்..

நீ எதிர்பாராமல் தான் என் வாழ்வில் நுழைந்தாய்...
ஆனால் எப்படி நான் எதிர்பார்த்தது போலவே இருக்கிறாய்?

--நிலா பெண்

நான் எதிர்பார்த்தபடியே வந்தாயே...
எதிரில் பார்த்தபின் ஏன் போனாய்...

--நிலா பெண்..

நான் எதிர்பார்த்தபடியே வந்தாயே...
எதிரில் பார்த்தபின் ஏன் போனாய்...

--நிலா பெண்..

உன்னை எதிரில் பார்க்க நாணப்பட்டு தானே,
ஓர பார்வையில் பார்க்கிறேன்...
அது புரியாதா உனக்கு?

--நிலா பெண்..

நான் எதிர்பார்க்கும் போதெல்லாம் வராமல்,
எப்படி எதிர்பார்க்காத போது எதிரே வருகிறாய்?

--நிலா பெண்..

சரி.. நமக்குள் ஒரு ஒப்பந்தம்..
நான் இனி உன்னை எதிர்பார்க்கவே மாட்டேன்..
என் அருகிலேயே இருந்துவிடேன் எப்பொழுதும் பார்க்குபடி..

--நிலா பெண

உன்னை கனவில் எதிர்பார்ப்பதால் தான்,
என் விழிபார்வையை துயில செய்கிறேன்..

--நிலா பெண்..

கள்வனே..
எதிர்பார்த்தேன்...
எப்படி கனவில் கூட என்னை காணாதவன் போலவே
தத்ரூபமாக நடிக்கிறாய்?

--நிலா பெண்.

உன்னை எதிரே பார்த்த நாளில்..
எதிர்காலத்தையும் உன் வடிவில் பார்த்தேன்..

--நிலா பெண்..

பொன் நகையை விட
உன் புன்னகையை தானே நான் அதிகம் எதிர்பார்ப்பது..

--நிலா பெண்..

நான் எதிர்பார்க்கவே இல்லை..
நீ என்னை எதிர்பார்பாய் என்று..

--நிலா பெண்




நினைவு...

உன் நினைவுகளை 
என் இதய அறையில் பூட்டிவிட்டு...
வேண்டுமென்றே தான் தொலைத்தேன்
அதன் சாவியை...

--நிலா பெண்

சந்தேகம்...

நான் பலமுறை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டவள், 
குறுக்கு கேள்விகள் நெஞ்சை துளைக்க ...
நேர்மை திறமிருந்தும் நெஞ்சில் உரமின்றி ...
இதயம் இழந்து எண்ணம் இழந்து சரிந்து விழுந்தவள்..
எனக்கு சிறிது ஓய்வு கொடு 
நீ உன் கேள்விக் கனைகளை கூர் தீட்டு 
நான் என் நெஞ்சுக்கு வலுவூட்டுகிறேன்.. 
ஆனால் என் அன்பு குறையவில்லை.. 
சந்தேகிக்காதே என்னை..
மீண்டும் சந்திக்க சக்தி இல்லை..
இன்னொரு கூண்டில்.. 

--நிலாப்பெண்..

நீ வேண்டும்..

தங்க மணிகள் தேவையில்லை
உன் கண்மணியில் இடம் வேண்டும்...
தோப்பு துரவுகள் தேவையில்லை
உன் தோளில் சாய துணிவு வேண்டும்..
காசு பணம் தேவையில்லை
உன் காலடியில் வாழ வரம் வேண்டும்..
உலக வாழ்வே தேவையில்லை
என் காதலை ஏற்க நீ வேண்டும்..

--நிலா பெண்..

இருள் தோழன்...

இருட்டு தான் அதிகம் பிடிக்கிறது,
என் துக்கம் மறைக்க உதவும் தோழன்..
என் தூக்கமின்மையை விழித்திருந்து பார்க்கும் தோழன்...
என் கவலை ரேகைகளை கரம் கொண்டு காக்கும் தோழன்...
என் தனிமைக்கு துணைநின்ற தூய தோழன்..
ஏய் இருளே! 
உனக்குள் நான் அடங்காதிருந்திருந்தால்,
மூச்சை நிறுத்தி அடங்கியிருப்பேன் மண்ணுக்குள்!

--நிலாப்பெண்..

ஒவ்வொரு நொடியும்........

ஒவ்வொரு நொடியும் உன்னை நினைக்கிறேனே..
ஒரு நொடியாவது நீ என்னை நினைப்பாயா?

--நிலா பெண்

நினைவே..

"மறந்தும் உன்னை நினைக்க மாட்டேன்"

என்று சொன்ன நீயா?

"என்னையே மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன்"

என சொல்கிறாய்??

--நிலாப்பெண்...

மழை...

அழைக்கும் போதெல்லாம் வரமால்
அறுவடை நேரத்தில் வந்தாயே.. 
உழவனின் கண்ணீர் மழையை உளவு பார்க்கவோ??
--நிலா பெண்

ஆசைப்படுவதில்லை...

நான் ஆசைப்படுவதை விட்டுவிட்டேன்,
புத்தர் போதனைக்காக அல்ல..
காதலால் புத்தி பேதலித்ததிலிருந்து....

--நிலாப்பெண்

Tuesday, November 18, 2008

முள்...

குத்தினாலும் வலிக்காத முள்
உன் மீசை மட்டுமே... 

--நிலாப்பெண்..

வலி தான் வாழ்வோ?????

வார்த்தைகளில் விஷம் தோய்த்து
தெறிக்கிறாய் உள்மனதில்..

நொந்து போன மனம் வெந்து
போய்க் கிடக்கிறது..

தெம்பிழந்து தெளிவிழந்து பிணமாகி
போகிறேன் நித்தமும்...

சக்தியில்லை, சாவும் வரவில்லை
சாபமாகி போன வாழ்க்கை..

கண்ணீர் தீர்ந்து ரத்தம் 
வழிகிறது விழிகளிலிருந்து...

வலிகளையும் ரணங்களையுமே
வரமாக பெற்றேனோ?

நரகத்தில் கூட தண்டனைகள்
குறைவாக இருக்குமோ?

நிம்மதியை இழக்கவில்லை,எப்போதாவது
பெற்றிருந்தால் தானே இழப்பதற்கு..

இனியும் தாங்காது இதயம்,
இறப்பினையாவது இறைவா கொடு!

--நிலாப்பெண்.. 

உன்னிடம் மட்டும்

தோற்று போக 
யாருக்கு தான் பிடிக்கும்?
எனக்கு பிடிக்கும்,
உன்னிடம் மட்டும்...

--நிலா பெண்

எதற்கு காதலர் தினம்...

நீ முதன்முதலாய் எனை பார்த்த நாள்..

நீ பார்த்து புன்னகை செய்த நாள்..

உன்னோடு கைக்குலுக்கிய நாள்..

பேருந்தில் உன்னருகில பயணித்த நாள்..

செல்லிடைப்பேசிக்கு உன் அழைப்பு வந்த நாள்..

நீ அறியாமலேயெ உனை பின் தொடர்ந்த நாள்..

எனக்கு பிடித்த நிறத்தில் உடையணிந்த நாள்..

மழை நாளில் உன் குடைக்குள் நுழைந்த நாள்..

உன் தோட்ட ரோஜாவை என் மேசையில் வைத்த நாள்..

என் வெட்கம் காண நீ கண்ணடித்த நாள்..

அழகாய் சிரிக்கிறாய் எனக் கவிதை சொன்ன நாள்..

எனக்கு பிடித்த புத்தகத்தை பரிசளித்த நாள்..

காதலை சொல்வதற்கு பதில் காபி சாப்பிடீங்களா என உளறிய நாள்..

தட்டுத்தடுமாறி கடைசியாய் காதலை சொன்ன நாள்..

நானும் காதலிக்கிறேன் என்றதும் பரபரப்பில் "நன்றி" சொன்ன நாள்..

இரண்டு நாட்கள் எனை காணமல் வீட்டிற்கே வந்த நாள்..

காய்ச்சல் குணமாக காவடி எடுத்த நாள்..

என் கண்ணில் தூசி விழுந்ததற்காக நீ கண் கலங்கிய நாள்..

எதிர்பாராமல் ஒரே நிற உடையில் சந்தித்த நாள்..

உன்னோடு கைக்கோர்த்து நடந்த நாள்..

இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்த நாள்..

முதன்முறையாய் உனை காண நான் காத்திருந்த நாள்..

செல்லமாய் என்னிடம் கோபித்து கொண்ட நாள்..

என் சமையல் என்பதற்காக உப்பில்லா உணவையும் உவகையோடு உண்ட நாள்..

இதமாய் உன் தோள் சாய்ந்து உறங்கிய நாள்..

தோல்வியின் போது உன் மடியில் முகம் புதைத்து அழுத நாள்..

வெற்றியின் போது உன் கரம் பிடித்து மகிழ்ந்த நாள்..

இத்தனை நாட்கள் கொண்டாட இருக்க..

நமக்கெதற்கு தனியாய் "காதலர் தினம்"

--நிலா பெண்.. 

மின்னல்..

கற்றை மழையில்,
மின்னல் வெட்டு..
வானவெளியில் அல்ல,
உன் பார்வை ஒளியால்..

--நிலாப்பெண்...

மது வேண்டாம்

அருகில் இருக்கும் மதுக்கடைக்கு
அடிக்கடி போகும் தந்தையால்,
தொலைதூரம் இருக்கும் மருந்துக்கடைக்கு
தினந்தோறும் பயணிக்கிறாள் தாய்..
அப்பா அவளை அடித்தற்காக மருந்து வாங்க அல்ல,
தந்தைக்கு மது பரிசளித்த புற்றுநோய்க்காக..

--நிலா பெண் 

மீசைக்காரா...

உன் மீசையை அடிக்கடி முறுக்கி விடாதே..
அதை பார்த்து நொறுங்குவது என் மனம்..

--நிலாப்பெண்.. 

விழிமீன்..

இரவில் உன் விழிமீன்களை திறந்து விடாதே..
விண்மீன்கள் எல்லாம் ஒளிந்து கொள்ளும்..

நிலாப்பெண்..

Saturday, May 31, 2008

Monday, May 26, 2008