Friday, August 5, 2011

தேவதன் :)


பெண்கள் தேவதைகளாக வருணிக்கப் படுகிறனர்..
உன்னை என்னவென சொல்வது?
சரி! வித்தியாசத்திற்கு
உனை பெற்ற அம்மா தேவதையாகட்டுமே!

புன்னகை


மரணத்தை கொல்ல வேண்டுமா,
ஒரு முறை புன்னகை செய்..
மரணம் கெஞ்சும் வாழ்வதற்கு!

தெரியும்..

உன் பார்வைக்குள் வசியம் வைத்திருக்கிறாயடா!!
எப்படித் தெரியுமா?
பிறகு எப்படி எப்போதும் எனக்கு நீயே தெரிகிறாய்?

--நிலாப்பெண்..

காதல்..


நீ ஆறுதல் கூறுவதானால்,
இன்னும் ஆயிரம் முறை சண்டையிடலாம்...

--நிலாப்பெண்..