Thursday, August 26, 2010

உணர்வின் உணர்வு!


மரணித்த பின்பு
தானே புதைப்பார்கள்,
நானோ புதைக்கிறேன்
உயிர்பெறும் உணர்வுகளை!

அடக்காத உணர்வுகள்
உயிரை குடிக்காது,
குதறி விளையாடும்
உயிரின் வேரினை!

காயத்தின் ரத்தம்
உறைந்து போகும்,
படிந்து விடுமே
பலமாக வடுக்கள்!

பத்திரமாய் புதைக்கிறேன்
உணர்வுகளை ஆழத்தில்,
ஒடுக்கப்பட்ட உணர்வுகள்
ஒய்யாரமாய் கர்ஜிக்கிறது!

ஒடுக்கப்படலாம்,
ஒழிக்க முடியுமா என?

--நிலாப்பெண்..

1 comment:

Vivekanandan.M said...

nice one, pinreengale... :)