Monday, May 27, 2013

சாபம்

உன் ராசாத்தி நானென நம்பி
கட்டிய கனவுக்கோட்டைகள் 
நொறுங்கும் நேரம்.
உன் முத்தம் அறிந்த
உதடுகளை பிதுக்கி
அழ மட்டுமே முடிந்தது.
சாபத்தை வரமாய் பெற்றப்பின்
ஆவித் துடித்தாலும்
கண்ணீர் வெடித்தாலும்
செத்த காதலுக்கு
எப்படி உயிர் வரும்?
பாவியாய் போனேன்
பரிதவித்து நின்றேன்.
என் இதயத்தின் கனம்
அதிகரித்துக் கொண்டே,
எறியமுடியாமல்
எரியவும் முடியாமல்!!!

--நிலாப்பெண்..

4 comments:

Dhivya said...

nice

Dhivya said...
This comment has been removed by the author.
"அம்மு" said...

இதயத்தின் கனத்தை கவிதைகளாய் இறக்கி வைத்துள்ளாய் தோழி :)

Anonymous said...

அழகான வரிகள் தோழி.. வாழ்த்துக்கள்.. நானும் ஒரு தவழும் குழந்தையாய் இந்த கவிதை உலகில் ஊர்ந்து கொண்டிருக்கிறேன்... என் பாதையான வலைப்பூவிற்கு(blog) உங்களை அன்போடு அழைக்கிறேன் தோழி.. tamilelavarasi.wordpress.com