Friday, May 18, 2018

நமைத் தேடி!


கரடு முரடான
காட்டு பாதையில்
துள்ளி ஓடும்
மானாய்
நம் காதல்!
கல் தடுக்கி
விழுமோ
கால் தடுக்கி
விழுமோ என்ற
பதைபதைப்பு!
அந்த வஞ்சப் புலியிடம்
அகப்படுமோ?
புதைக்குழியில்
புதைந்து விடுமோ
என்ற பரிதவிப்பு!
நாம் கைக்கோர்த்து
கண்ணீர் கரைந்து
காதல் தேடுகையில்
புது மழலையாய்
அந்த மான்
நம் மடியில்
நமைத் தேடி!

--நிலாப்பெண்


No comments: