Friday, May 18, 2018

நிலவா!


என் வாழ்வை இத்தனை அழகாய்
செதுக்கிய சிற்பி நீ!
என் உலகை வண்ணமயமாய்
வரைந்த ஓவியன் நீ!
கருவில் வந்து தாய்மை
உணர்வை தந்த கடவுள் நீ!
எனக்காக உனை சுமந்து
உன்னால் உயிர் சுமந்தேன்!
நீ பிறந்த இத்தினம்
நான் மறுமுறை பிறந்த தினம்!
கவிதையாய்
காதலாய்
உன் மழலைக்குள் நான்,
முதல் முறை மழை கண்ட மழலையாக!
நிலவா! ஒளியை மட்டும் காண்கிறேன்
உன்னால்!

--
நிலாப்பெண்


No comments: