Thursday, May 12, 2011

காதல் வலை

காதல் உலகில் காலடி வைக்கையில்,

காற்று காதில் மெதுவாய் வருட

குயில்கள் கூட்டம் கானம் பாட

மரம் அசைந்து பூக்கள் தூவ

நிலவு ஒளியை இன்னும் கூட்ட

மழைத்துளி மண்ணில் எங்கும் படர

முகம் முழுக்க பூரிப்புடன்

கண்கள் சிரிக்கக் கனவுக் கொண்டு

மழலையாக துள்ளி மகிழ்ந்து

காதல் கோட்டைக்குள் வேகமாய் நுழைந்து

ஓடியாடி சில தூரம் கடக்கையில்,

காற்று புயலாய் மாறி கர்ஜிக்க

கிளைகள் ஆடி குயில்கள் பறக்க

வெள்ளம் பாய்ந்து பாதை மறைக்க

இருளின் ராஜ்ஜியம் எங்கும் விரிய

கண்கள் மூடி வெளிச்சம் தேட

வலையில் சிக்கிய கால்கள் நடுங்க

உணர்ந்தேன் பலியான கனவுகளை

கேட்டேன் காதலின் அரக்கச் சிரிப்பை..

--நிலாப்பெண் “புவனா”

No comments: