Thursday, September 3, 2009

எப்படி மறந்தேன்...


மனதின் கனம்,
இறக்கி வைக்க
தேடுகிறேன் யாரையாவது..
உயிர் தோழியோ
தொலை தூரத்தில்..
அலுவலக வலைக்குள்
வேண்டியவர்கள்..
செல்லிடைப்பேசிக்குள்
சிக்கியிருக்கும்
நூற்றுக்கும் மேற்பட்டோர்
எண்கள்...
திரும்ப திரும்ப
பார்க்கிறேன்.........
பெயர்களை மட்டும்..
யாரிடம் பகிர்வது?
யாருடைய நேரத்தையாவது
களவாடி என் துயர்
மறக்க வேண்டுமே!
பரந்த உலகில்
கோடிப்பேர்,
அவரவர் வாழ்கையை
தேடிக் கொண்டு..
செவி சாய்க்க
எவருமில்லை எனக்கு..
"திடீர் வெளிச்சம்"
அட! அருகிலேயே நீ..
எப்படி மறந்தேன்
என் இனத்தவளை?
அமைதியாய்,
முகம் சுளிக்காமல்,
என் கதைக்கேட்கும்
உன்னை..
என் தேவதை பொம்மையே!

--நிலாப்பெண்..

3 comments:

Pop said...

Really touchy !!!

Unknown said...

அருமை அருமை தோழி ....!!

radkrish said...

nallarukku kavithaigal.