Monday, August 30, 2010

வாழ்கையாம் வாழ்க்கை!!!


வேதனை தலைத்தூக்கும் நேரம்,
தலைக்குனியும் தன்னம்பிக்கை..

சுடும் வார்த்தைகளின் முன்,
சுடுகாட்டில் சுயமரியாதை..

கண்ணீரின் வரவறிந்து,
சென்றுவிடும் சிரிப்பலை..

மரியாதை மிதிப்படுகையில்,
மறைந்துவிடும் மனிதநேயம்..

இழப்புகள் இறுதிவரை தொடர,
வரவுகள் மட்டும் வக்கனாய்..

வாழ்க்கையாம் வாழ்க்கை!
மனிதராம் மனிதர்!!

--நிலாப்பெண்..

1 comment:

கவிதை பூக்கள் பாலா said...

அழகிய(வலித்த ) வார்த்தை தெடுக்கும் பூக்காரி நீ தோழியே !