Sunday, June 14, 2009

மரண வாசல்..


தூக்கத்தைத் தூக்கிலிடும்
கண்ணீர்த் துளிகள்
இடைவேளையின்றி
இமைகளின் இடையில்..
என் துக்கங்கள்
பல நேரங்களில்
தொண்டைக் குழிக்குள்
புதைக்கப் பட்டது..
வீறிட்டு அழத்
திராணியற்று
திணறுபவளாய்...
அழுபவர் கோழை
ஐந்து வயதில்
இருந்த ஞானம்,
தனிமை துணைக்கு
வந்தப் பின்
மறந்துப் போனது...
அழுது சிவந்த கண்களை
கண்ணாடியில் காண்கையில்
கள்ளிப்பால் கொடுக்காதவரை
பெரிதாக நொந்துக் கொண்டேன்..
ஒவ்வொரு இரவும்
நாளையாவது விடியும்
எனும் நப்பாசையும்
நலிந்து போனது..
இதய ரணங்களுக்கு
மருந்து போட
மனமில்லை...
மரணத்தின் வாசலில்
மறைந்து போகும்
எண்ணத்துடன்.....................
--நிலாப்பெண்..

No comments: