Sunday, June 14, 2009

வாழ்க்கையுடன் போராடு..


உன் சுயமரியாதைக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டால்,

வலியென வீழ்ந்துவிடாதே!

விழித்துக் கொண்டுப் போராடத் தொடங்கு....

தனிமை சிறையில் அகப்பட்டு கொண்டால்

இருட்டுக்குள் அடங்கிவிடாதே!

பிறர் வாழ்க்கைக்கு ஒளியேற்ற ஓடு...

வாழ்க்கை பாதையில் தடங்கல்கள்

தடுத்தால்தடுமாறி தளராதே!

விண்ணை தொடுவது போல் எகிறி தாண்டு..

தினம்தினம் உன் மேல் விழும் அடிகளால் அடங்கி விடாதே!

நீ ஒவ்வொரு அடியாக முன்னேறுவதாய் நம்பு..

விதியென மூலையில் மூளையில்லாதுமழுங்கி விடாதே!

மதிக் கொண்டு வெல்வதை உலகிற்கு இயம்பு..

கூனிக் குறுகி கேள்விக்குறியாய் வாழ்ந்துமாய்ந்து விடாதே!

நிமிர்ந்து நின்று ஆச்சரியக் குறியாக உயர்..

--நிலாப்பெண்..

2 comments:

Anitha said...

Wow!!!!!
Amazing......

\உன் சுயமரியாதைக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டால்,வலியென வீழ்ந்துவிடாதே!விழித்துக் கொண்டுப் போராடத் தொடங்கு..../

\தினம்தினம் உன் மேல் விழும் அடிகளால் அடங்கி விடாதே!நீ ஒவ்வொரு அடியாக முன்னேறுவதாய் நம்பு..\

Excellent lines...!

குரு said...

அருமையான வரிகள்...!!