Thursday, November 20, 2008

பார்த்ததால்

ஒவ்வொரு நாளும் உன்னை எதிர்ப்பார்க்க ஆரம்பித்தது,
எதிர்பாராமல் ஒரு நாள் பார்த்ததால் தான்...

--நிலா பெண்..

எதிர்பாராமல் உன்னை ஒரு நாள் பார்த்ததற்காகவா,
ஒவ்வொரு நாளும் எதிர்ப்பார்க்கிறேன், "அதே நாளை"?

--நிலா பெண்.

எதிர்ப்பாராமல் ஒரு நாள் பார்த்து சென்றாயே...
எதிர்ப்பார்க்கிறேன் நீ மறுபடியும் பார்க்கும் நாளை..

--நிலா பெண்..

எதிர்பாராமல் உன்னை பார்த்த நாள் கூட,
என் முகம் பாராமல் ஏன் சென்றாய்...

--நிலா பெண்

என்னை தான் எதிர்பார்க்கிறாய் என்பதை
உன் விழி பார்வையே சொன்னதடா..

--நிலா பெண்..

எதிர்பார்த்தது எல்லாம் நடக்க வேண்டாம்...
என்னை எதிரில் பார்த்த பின்னாவது நின்றிருக்கலாமே..

--நிலா பெண்

எதிர்காலத்தில் நான் எதிர்பார்த்தது எல்லாம்,
உன்னை எதிரில் பார்த்த பின் நடக்கும் என்று நம்பினேன்..

--நிலா பெண்..

நீ எதிர்பாராமல் தான் என் வாழ்வில் நுழைந்தாய்...
ஆனால் எப்படி நான் எதிர்பார்த்தது போலவே இருக்கிறாய்?

--நிலா பெண்

நான் எதிர்பார்த்தபடியே வந்தாயே...
எதிரில் பார்த்தபின் ஏன் போனாய்...

--நிலா பெண்..

நான் எதிர்பார்த்தபடியே வந்தாயே...
எதிரில் பார்த்தபின் ஏன் போனாய்...

--நிலா பெண்..

உன்னை எதிரில் பார்க்க நாணப்பட்டு தானே,
ஓர பார்வையில் பார்க்கிறேன்...
அது புரியாதா உனக்கு?

--நிலா பெண்..

நான் எதிர்பார்க்கும் போதெல்லாம் வராமல்,
எப்படி எதிர்பார்க்காத போது எதிரே வருகிறாய்?

--நிலா பெண்..

சரி.. நமக்குள் ஒரு ஒப்பந்தம்..
நான் இனி உன்னை எதிர்பார்க்கவே மாட்டேன்..
என் அருகிலேயே இருந்துவிடேன் எப்பொழுதும் பார்க்குபடி..

--நிலா பெண

உன்னை கனவில் எதிர்பார்ப்பதால் தான்,
என் விழிபார்வையை துயில செய்கிறேன்..

--நிலா பெண்..

கள்வனே..
எதிர்பார்த்தேன்...
எப்படி கனவில் கூட என்னை காணாதவன் போலவே
தத்ரூபமாக நடிக்கிறாய்?

--நிலா பெண்.

உன்னை எதிரே பார்த்த நாளில்..
எதிர்காலத்தையும் உன் வடிவில் பார்த்தேன்..

--நிலா பெண்..

பொன் நகையை விட
உன் புன்னகையை தானே நான் அதிகம் எதிர்பார்ப்பது..

--நிலா பெண்..

நான் எதிர்பார்க்கவே இல்லை..
நீ என்னை எதிர்பார்பாய் என்று..

--நிலா பெண்




No comments: