Thursday, November 20, 2008

சந்தேகம்...

நான் பலமுறை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டவள், 
குறுக்கு கேள்விகள் நெஞ்சை துளைக்க ...
நேர்மை திறமிருந்தும் நெஞ்சில் உரமின்றி ...
இதயம் இழந்து எண்ணம் இழந்து சரிந்து விழுந்தவள்..
எனக்கு சிறிது ஓய்வு கொடு 
நீ உன் கேள்விக் கனைகளை கூர் தீட்டு 
நான் என் நெஞ்சுக்கு வலுவூட்டுகிறேன்.. 
ஆனால் என் அன்பு குறையவில்லை.. 
சந்தேகிக்காதே என்னை..
மீண்டும் சந்திக்க சக்தி இல்லை..
இன்னொரு கூண்டில்.. 

--நிலாப்பெண்..

No comments: