Thursday, November 20, 2008

பெண்மை காதல்..

பருவத்தின் வேகத்தை சந்தித்தேன் உன்னை சந்தித்ததும்...

பாவை என் மனதில் பாசத்தை கண்டேன் உன்னை கண்டதும்..

பிரிவின் வேதனையை உணர்ந்தேன் நீ விலகியதும்..

பீச் [beach] காற்றும் சில்லென்று சுட்டது நீ என்னை தொட்டதும்..

புன்னகையின் அர்த்தத்தை அனுபவித்தேன் உன் கனியிதழ் விரிந்ததும்..

பூவின் மனதை பார்த்தேன் நீ தலையசைத்து மகிழ்ந்ததும்... 

பெண் என் மனம் பொன்னாகுது உன்னை நினைத்ததும்..

பேதை என் பாதையை உணர்ந்தேன் உன்னை உணர்ந்ததும்...

பொழுதின் வண்ணத்தை விழித்திருந்து கண்டேன் உனை கனவாக...

போராடியது பெண்மையின் உள்ளம் உனை காணாததும்..

பெளர்ணமி நிலவாய் கரைந்தது நம் காதல் உனை இழந்ததும்..

--நிலாப்பெண்..

No comments: